×

காவலர் செயலி விளக்க கூட்டம்

ஓசூர், அக். 31: கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி மகேஷ்குமார் ஆலோசனையின் பேரில், ஓசூர் டிஎஸ்பி மீனாட்சி தலைமையில் காவலர் செயலி விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓசூர் பகுதி தொழிற்சாலைகளின் நிர்வாக அதிகாரிகள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள், பஸ் நிலையம், தியேட்டர் டூ விலர் ஸ்டாண்ட் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.  கூட்டத்தின்போது, தலைகவசம் உயிர் கவசம் என்றும், அதை அணிவது தங்களுக்கு மட்டுமின்றி குடும்பத்திற்கு பாதுகாப்பானதாக அமையும். காவலர் செயலி குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், காவலர் செயலியை பதிவிறக்கம் செய்வது தொடர்பான செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இந்த செயலி மூலம் காவல்துறைக்கு எளிதாக தகவல் அளிப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. 

Tags : Defender ,Guard ,
× RELATED ராசிபுரம் அருகே இருசக்கர வாகனத்தின்...