×

திருத்தணி அடுத்த மாங்காபுரத்தில் குடிசை வீடு எரிந்து பொருட்கள் நாசம்: 8 ஆடுகளுக்கு தீக்காயம்

திருத்தணி, அக். 31: திருத்தணி அடுத்த மங்காபுரத்தில் குடிசை  திடீரென தீபிடித்து எரிந்ததில் பொருட்கள் நாசமானது. மேலும் 8 ஆடுகள் தீக்காயம் அடைந்தது. திருத்தணி அடுத்த மேல்முருக்கம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட மங்காபுரம் காலனியில் வசிப்பவர் ராமராஜன் (30). கூலி தொழிலாளி. இவரது மனைவி மாரி (27). இவர்களது மகன் யோகேஷ் (6). மகனை நேற்று காலை 8 மணியளவில் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, ராமராஜனும் மாரியும் வேலைக்கு சென்றனர். இதன்பிறகு 10 மணியளவில் ராமராஜனின் குடிசை வீடு திடீர் என தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருத்தணியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ரசுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் ரேஷன் கார்டு உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.மேலும் வீட்டை ஒட்டிய கொட்டைகையில் இருந்த 8 ஆடுகளும் தீக்காயம் அடைந்தது. அந்த ஆடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.

Tags : Tiruttani ,mangamburu hut housing house ,
× RELATED திருத்தணி அருகே கரும்பு தோட்டத்தில்...