×

திருநள்ளாற்றில் பைக் திருடிய 2 வாலிபர்கள் கைது

காரைக்கால், அக்.30: காரைக்கால் திருநள்ளாற்றில், பைக் திருடிய ஆடுதுறையை சேர்ந்த வாலிபர்கள் 2 பேரை திருநள்ளாறு போலீசார் கைது
செய்தனர். காரைக்கால் திருநள்ளாறு கடைதெரு பகுதியில், திருநள்ளாறு காவல்நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமாக பைக் ஒன்றை ஓட்டிவந்த இருவரை போலீசார் நிறுத்தி விசாரித்தபோது, இருவரும் முன்னுக்கு பின் பதில் அளித்தனர். தொடர்ந்து, காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்தபோது, இருவரும் ஆடுதுறை சாத்தனூரை சேர்ந்த மணிகண்டன்(28), மகேஸ்வரன்(29) ஆகியோர் என்பதும், கடைவீதியில் நிறுத்தியிருந்த பைக்கை திருடிகொண்டு ஆடுதுறை சென்றபோது போலீசில் சிக்கியதையும் ஒப்புகொண்டனர். பின்னர், இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த பைக்கை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags : men ,Tirunallar ,
× RELATED இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு;...