×

முதுகு தண்டுவடம் பாதித்தவர்கள் மறுவாழ்வு பெற பதிவு செய்யலாம்

நாமக்கல், அக்.30: நாமக்கல் மாவட்டத்தில் முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்கள், மறுவாழ்வு உதவிபெற பதிவு செய்யலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து  நாமக்கல் கலெக்டர் ஆசியாமரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  நாமக்கல் மாவட்டத்தில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள்,  மறுவாழ்வு உதவிபெற மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை, ரேஷன்  கார்டு, ஆதார் எண் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு  துவங்கியவராக இருக்கவேண்டும். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் உரிய  ஆவணங்களுடன், கலெக்டர்  அலுவலகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள்  நல அலுவலகத்தில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவரின் பெற்றோர் அல்லது  பாதுகாவலருடன் நேரில் வந்து பதிவு செய்யவேண்டும்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு