×

சாத்தான்குளம் அருகே தொழிலாளி மர்மச்சாவு

சாத்தான்குளம், அக்.30: சாத்தான்குளம் அருகே தொழிலாளி மர்மமாக இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.சாத்தான்குளம் அருகேயுள்ள விஜயராமபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் குமரேசன் (45). தொழிலாளி.
நேற்று முன்தினம் இரவு விஜயராமபுரம்- சாத்தான்குளம் சாலையில் உள்ள தோட்டம் அருகில் குமரேசன் பிணமாக கிடந்தார். அவரது உடலில் காயம் ஏதும் இல்லை. அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
தகவல் அறிந்து சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ராஜாசுந்தர் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Sattankulam ,
× RELATED தந்தை மகன் உயிரிழப்பு தொடர்பாக...