×

கோயிலுக்கு வாடகை செலுத்தாததால் இரும்பு குடோனுக்கு ‘’சீல்’’

திருவொற்றியூர்: திருவொற்றியூர், ஜோதி நகர் அருகே காலடிப்பேட்டையில்  கல்யாண வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ஏராளமானோர் அடிமனை வாடகைதாரர்களாக உள்ளனர். இந்நிலையில், கோயில் இடத்தில் இரும்பு குடோன் நடத்திவரும் ஜெகன்மோகன் மற்றும் அன்ஸ்ராஜ் போத்ரா ஆகிய இருவரும் கடந்த பல ஆண்டுகளாக அடிமனை வாடகை கட்டாமல், சுமார் ₹20 லட்சம் வரை பாக்கி வைத்துள்ளனர்.

இதுகுறித்து அவர்களுக்கு பலமுறை அறநிலையத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியும் வாடகை பணத்தை கட்டவில்லை. இதையடுத்து, சென்னை மண்டல உதவி ஆணையர் அன்னக்கொடி, செயல் அலுவலர் சரவணரூபன் மற்றும் அதிகாரிகள் நேற்று காலை 10 மணியளவில் வாடகை பாக்கி வைத்துள்ள ஜோதி நகர் இரும்பு குடோனுக்கு வந்தனர். பின்னர், அக்குடோனின் கதவுகளை இழுத்துப் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

Tags :
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...