×

பாடாலூர் பூமலை சஞ்சீவிராயர் கோயிலில் பவுர்ணமி கிரிவலம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

பாடாலூர், செப்.25: ஆலத்தூர் தாலுகா பாடாலூர் பூமலை சஞ்சீவிராயர் மலைக் கோயிலில் பவுர்ணமி கிரிவலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கிரிவலம் வந்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் உள்ள பூ மலை சஞ்சீவிராயர் மலைக்கோயிலில்  226-வது பவுர்ணமி கிரிவல விழா நேற்று  நடைபெற்றது. முன்னதாக மாலை 5 மணிக்கு மலையின் அடிவாரத்தில் ஏராளமான பக்தர்கள் ஒன்று கூடி கையில் தேங்காய் பூ பழங்களுடன் மலையை சுற்றி கோவிந்தா கோவிந்தா என்று பக்தி பரவசத்துடன் மலையை சுற்றி கிரிவலம் வந்தனர். பின்னர் வழித்துணை ஆஞ்சநேயர் கோவிலில் சுவாமிக்கு பால், பன்னீர், மஞ்சள், புஷ்பம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்க பட்டது.
விழாவில் பாடாலூர்,  திருவிளக்குறிச்சி, தெரணி, காரை, விஜயகோலபுரம், புதுக்குறிச்சி, நாரணமங்கலம், மருதடி, இரூர், சீதேவிமங்கலம், கூத்தனூர், நாட்டார்மங்கலம், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  கிரிவலம் ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் யுவராஜூ, தக்கார்  பாரதிராஜா மற்றும் கிரிவலம் கமிட்டியினர் செய்திருந்தனர்.

Tags : Participants ,Pandalam ,earth ,
× RELATED மிகப் பெரிய காரியங்களுக்கு மிகச் சிறிய காரணங்கள் போதும்!