அஞ்சுகிராமம், அக். 25: அஞ்சுகிராமம் மண்டல் பாஜ சார்பில் சாதனை விளக்க தெருமுனை கூட்டம் சங்கரலிங்கபுரத்தில் நடந்தது. அஞ்சுகிராமம் மண்டல் பாஜ சார்பில் சாதனை விளக்க தெருமுனை கூட்டம் அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட சங்கரலிங்கபுரத்தில் நடைபெற்றது. மண்டல் பாஜ தலைவர் ராஜலிங்கம் தலைமை வகித்தார். மண்டல் செயலாளர் சோமசுந்தரமூர்த்தி, மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் அருள்சிவா, பொதுச் செயலாளர் ராஜபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஹிட்லர் வரவேற்றார்.இதில், சிறப்பு விருந்தினராக மாவட்ட பாஜ செயலாளர் விசு கலந்து கொண்டு பாஜக அரசின் சாதனைகளை விளக்கி பேசினார். கூட்டத்தில் நிர்வாகிகள் சுரேஷ்குமார், நாராயணன், சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். பாக்கியராஜ் நன்றி கூறினார்.