நீடாமங்கலம்,அக்.23: நீடாமங்கலத்தில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ரயில்வே வேகன்களில் 945டன் நெல்மூட்டைகள் அரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த பருவம் சம்பா மற்றும் தாளடியில் நிலத்தடிநீரை பயன்படுத்தி மின் மோட்டார் மூலம் சன்னரக நெல்கள் சாகுபடி செய்யப்பட்டது. இதனை மன்னார்குடி பகுதிகளில் உள்ள அரசு திறந்த வெளி சேமிப்பு மையங்கள் அசேசம்,எடையர்நத்தம், தெற்குநத்தம், மூவாநல்லுர், மற்றும் நவீன அரிசி ஆலை சுந்தரகோட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 75 லாரிகளில் 945 டன் சன்ன ரக நெல் மூட்டைகள் நேற்று நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து 21 ரயில்வே வேகன்களில் தொழிலாளர்கள் ஏற்றி அரவைக்காக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அனுப்பி வைத்தனர்.