×

முத்துப்பேட்டை காவல் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

முத்துப்பேட்டை அக்.23: முத்துப்பேட்டை, எடையூர் காவல் நிலையங்களில் போதுமான காவலர்கள் இல்லாததால் பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும், போக்குவரத்து நெரிசலை சரி செய்ய முடியாமல் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. அதனால் இரண்டு காவல் நிலையங்களிலும் போதுமான காவலர்களை நியமிக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று (23ம்தேதி) மாலை 3மணியளவில் முத்துப்பேட்டை காவல் நிலையம் முன்பு நடைப்பெறுகிறது. ஒன்றியக்குழு உறுப்பினர் செல்லத்துரை தலைமை வகிக்கிறார். இதில் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.

Tags : Muthupettu ,police station ,CPI (M) ,
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...