நாகர்கோவில், அக். 11: தமிழகத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் உள்ள ஏபிஓ பணியிடங்கள் நீக்கப்பட்டுள்ளது. இப்பணியிடத்தினை மீண்டும் வழங்க கோரியும், உயர் அதிகாரிகளால் பணி நெருக்கடி, விடுமுறை தினங்களிலும் நடத்தப்படும் ஆய்வு கூட்டங்கள், இரவு வரை நடத்தப்படும் ஆய்வு கூட்டங்களை கண்டித்தும், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் அன்பு தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பகவதியப்பன் பிள்ளை வாழ்த்துரை வழங்கினார். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் சுமதி விளக்கவுரையாற்றினார். வருவாய்த்துறை மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் ராஜன் நன்றி கூறினார்.