வெள்ளக்கோவில், அக்.7: வெள்ளக்கோவில் அருகே 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். வெள்ளக்கோவில் அருகே முத்தூர் துணை மின்நிலையத்தில் இருந்து செட்டியார்பாளையம், மேட்டாங்காட்டுவலசு, முருகம்பாளையம், குளத்துபாளையம், அமராவதிபாளையம், பாப்பினி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2 வாரங்களாக இக் கிராமங்களில் முன்னறிவிப்பின்றி அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.