×

ஆழ்வார்குறிச்சி அருகே பள்ளி மாணவி மாயம்

கடையம், அக். 11:  ஆழ்வார்குறிச்சி அருகே செட்டிக்குளம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் மகள் தேவி(14). இவர், ஆழ்வார்குறிச்சியில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.  நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு சென்ற தேவி, சக மாணவிகளிடம் புத்தக பையை கொடுத்துவிட்டு அம்பையில் நடைபெறும் விளையாட்டு போட்டியில் பங்கேற்க செல்வதாக கூறிச் சென்றுள்ளார். பின்னர்
இவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், தோழிகள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தேவி தாயார் கஸ்தூரி ஆழ்வார்குறிச்சி போலீசில் புகார் செய்தார். கடையம் இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி
வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

Tags : School student magic ,Alwarakurichchi ,
× RELATED பள்ளி மாணவி மாயம்