×

ராமாயண சொற்பொழிவு

சிவகங்கை, அக். 10: நாட்டரசன்கோட்டையில் அமரத்துவக் கம்பன் அருட்கவிக் கழகம் சார்பில் கம்ப ராமாயண தொடர் சொற்பொழிவு நடந்து வருகிறது. கவிச்சக்கரவர்த்தி கம்பன் நினைவை போற்றிடும் வகையில் கம்பன் நினைவிடம் அமைந்துள்ள நாட்டரசன்கோட்டையில் அக்.6ல் தொடங்கிய சொற்பொழிவு இன்று நிறைவடைகிறது. தேவகோட்டை ராமநாதன் சொற்பொழிவாற்றி வருகிறார். தினமும் மாலை தொடங்கி இரவு வரை நடக்கும் இச்சொற்பொழிவில் பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொள்கின்றனர்.

Tags : Ramayana Sermon ,
× RELATED கிராம சபை கூட்டங்களில் மீண்டும்...