×

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

மதுரை, அக். 9: மதுரை பெருநகர் வட்ட மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள் 20 பேர் நேற்று கலெக்டர் நடராஜனிடம் கொடுத்த கோரிக்ைக மனுவில், ‘மதுரை பெருநகர் மின்வாரியத்தில் 60க்கு மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள், 1997 முதல் பணியாற்றி வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து கடும் மன உளைச்சலுக்கு ஆகியுள்ளோம். இதுதொடர்பாக மதுரை தொழிலாளர் ஆய்வாளரிடம் கடந்த 2009ல் மனு கொடுத்தும் 9 ஆண்டுகளாக எவ்வித விசாரணையும் இல்லை. நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடித்து, ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஊதிய உயர்வு, கருணைத்தொகை உள்ளிட்ட அனைத்து படிகளையும் வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.இன்றைய நிகழ்ச்சிகள்(இனிய வாசகர்களே... இப்பகுதிக்கு அமைப்புகள், சங்கங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிக்கான செய்திகளை,’  இன்றைய நிகழ்ச்சிகள்’ , தினகரன் நாளிதழ், 2/2, மேலூர் மெயின்ரோடு, உத்தங்குடி, மதுரை- 625 107 முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்) குடியிருப்பு பகுதியில் புகுந்த நீரை வெளியேற்ற வேண்டும்

Tags :
× RELATED வேளாண் மாணவிகள் சார்பில் கொய்யா...