பாபநாசம், அக். 9: பாபநாசம் அருகே சாலியமங்கலம் அடுத்த புலவர்நத்தத்தில் தமிழக அரசின் சிறப்பு குறைதீர் முகாம் நடந்தது. தாசில்தார் மாணிக்கராஜ், வட்ட வழங்கல் அலுவலர் பூங்கொடி, துணை தாசில்தார் அருட்பிரகாசம், கிராம நிர்வாக அலுவலர் சாமிநாதன் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து 13 கோரிக்கை மனுக்களை பெற்றனர். இதையடுத்து பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.