×

முகக்கவசம் அணிந்து மக்கள் வரலாம் அருங்காட்சியகங்கள் திறப்பு

சென்னை: தமிழக அருங்காட்சியகங்கள் துறை இயக்குனர் சி.அ.ராமன் வெளியிட்ட அறிவிப்பு: சென்னை அரசு  அருங்காட்சியகம் பொது மக்கள் பார்வைக்கு திறந்து விடப்படுகிறது. காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை அருங்காட்சியகத்தை பொது மக்கள்  பார்வையிடலாம்.  அருங்காட்சியகத்தை பார்வையிட வரும்  பார்வையாளர்கள் கோவிட்-2019 பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள். அதே போல் வகை 2 மற்றும்  3ல் உள்ளடங்கிய அரியலூர், கடலூர், கிருஷ்ணகிரி, பழநி, கன்னியாகுமரி, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்ட அருங்காட்சியகங்களும் 28ம் தேதி(நேற்று) முதல் பார்வையாளர்கள் கோவிட்-19  பாதுகாப்பு நெறிமுறைகளின்படி பின்பற்றி பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post முகக்கவசம் அணிந்து மக்கள் வரலாம் அருங்காட்சியகங்கள் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu Museums Department ,C. A. ,Raman ,Chennai Government Museum ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...