சென்னை: கே-கிக்ஸ் ஸ்னீக்கர்ஸ் நிறுவனம், சென்னையில் நேற்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் கே-கிக்ஸ் எனப்படும் ஸ்னீக்கர் நிறுவனத்தை, இளம் தொழில்முனைவோர்களான திவ்யா தயாநிதிமாறன், கரண் தயாநிதி மாறன் மற்றும் நிவேதிதா அரவிந்த் ஆகியோர் தொடங்கி வைத்து, ஸ்னீக்கர்களை அறிமுகம் செய்து வைத்தனர். புதிய நிறுவனம் குறித்து அவர்கள் கூறியதாவது: தற்போது விரிவடைந்து வரும் ஸ்னீக்கர் கலாச்சாரத்துடன் கூடிய கலை மற்றும் சுயவெளிப்பாட்டினை வெளிப்படுத்தும் வகையில் ஒரு புதிய முயற்சியாக நிறுவனத்தை தொடங்கியுள்ளோம். எங்கள் நிறுவனத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் விரும்பியதற்கு ஏற்ப ஸ்னீக்கர்கள் வடிவமைத்து கொடுக்கப்படும். அதாவது, வாடிக்கையாளர்கள், தங்களுக்குப் பிடித்தமான வண்ணம், படங்கள், டிசைன்கள் கொண்ட ஸ்னீக்கர் காலணிகளை தனித்துவத்துடன் வடிவமைத்து பெற்றுக் கொள்ளலாம். இதுபோன்று ஆர்டர் செய்யும் ஸ்னீக்கர்களை வடிவமைத்து வழங்க சில நிறுவனங்கள் 8 வாரங்கள் எடுத்துக் கொள்கின்றன. ஆனால், எங்கள் நிறுவனத்தில் 3 வாரங்களிலேயே வாடிக்கையாளர்களிடம் அவர்களின் விருப்பப்படி ஸ்னீக்கர் வடிவமைத்து வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.