சென்னை: சென்னை ஆவடி அருகே உடற்பயிற்சி நிறுவன பயிற்சியாளர் ஆகாஷ் ஜிம்மில் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தார். மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ள ஆகாஷ் திடீரென உயிரிழந்தார். ஆணழகன் போட்டிக்காக உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஸ்டீராய்டு ஊசியை ஆகாஷ் போட்டு வந்ததாக தகவல் தெரியவந்துள்ளது.