×

பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை: பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில், நடிகை யாஷிகா ஆனந்த் நீதிமன்றத்தில் ஆஜரானார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து, நோட்டா, ஜாம்பி உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் சமூக வலைதளங்களில், டிக் டாக், ரீல்ஸ்கள் செய்து பிரபலமானார். இந்நிலையில், 2021ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி நள்ளிரவு 12 மணி அளவில்  மாமல்லபுரம் அருகே சூளேரிக்காடு பகுதியில் வந்தபோது கட்டுப்பாட்டை மீறி சாலையின் நடுவில் கார் மோதிய விபத்தில் வள்ளிசெட்டி பவானி (28) இறந்தார். இவர், யாஷிகா ஆனந்தின் தோழி. மகாபலிபுரம் விபத்து குறித்து போலீசார் பதிவு செய்த வழக்கு செங்கல்பட்டு  முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இவ்வழக்கு விசாரணைக்காக கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில், யாஷிகா ஆனந்த் நேரில் ஆஜராகாமல் இருந்தார். தொடர்ந்து, வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத அவர்மீது  பிடிவாரண்ட் பிறப்பித்து மாவட்ட நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரனாவதனா உத்தரவிட்டார். இதனை அடுத்து ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி யாஷிகா ஆனந்த்தை கண்டிப்பாக நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில்,  நேற்று யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகி பிடிவாரண்ட் உத்தரவை தளர்த்தக்கோரியும், விசாரணைக்கு தவறாமல் ஆஜராகி முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என மனுத்தாக்கல் செய்தார்‌. அதையேற்று யாஷிகாஆனந்த்தின் பிடிவாரண்டை தளர்த்தி வரும் 25ம் தேதி தவறாமல் ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர் நீதிமன்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்.

Tags : Yashika Anand , Actress Yashika Anand appeared in the court after issuing a warrant
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!