×

காரப்பாக்கத்தில் பயங்கரம் போதையில் ஜாலியாக இருந்த பெண் படுகொலை: தலைமறைவான கணவன், கள்ளக்காதலனுக்கு வலை

சென்னை: காரப்பாக்கத்தில் மதுபோதையில் ஜாலியாக இருந்த பெண் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தலைமறைவான பெண்ணின் கணவன் மற்றும் கள்ளக்காதலனை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை காரப்பாக்கம், கந்தசாமி நாயக்கர் தெருவில் வசித்து வந்தவர் மல்லிகா (40). இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மூத்த மகன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குளத்தில் மூழ்கி இறந்து விட்டார். இளைய மகன் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கி, லாரியில் கிளீனராக வேலை செய்து வருகிறார். மல்லிகா தனது கணவன் இறந்த பிறகு, முருகன் என்பவரை 2வதாக திருமணம் செய்து அவருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் கண்ணகி நகரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவருக்கும், மல்லிகாவுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் கடந்த 5 ஆண்டுகளாக இருந்து வந்தது. முருகன் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு வந்த ஜெயக்குமார் மல்லிகாவுடன் ஜாலியாக இருந்து சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மல்லிகாவைப் பார்க்க அவரது இளைய மகன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது முகம் மற்றும் தலையில் பலத்த வெட்டு காயத்துடன் மல்லிகா இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து கண்ணகி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், நேற்று முன்தினம் இரவு மல்லிகா வீட்டிற்கு ஜெயக்குமார் வந்துள்ளார். அப்போது இருவரும் மது அருந்தியுள்ளனர். அதற்கு பிறகுதான் மல்லிகா இறந்துள்ளது தெரியவந்தது. எனவே குடிபோதையில் ஜெயக்குமாருடன் ஏற்பட்ட தகராறில் மல்லிகா கொலை செய்யப்பட்டாரா அல்லது ஜெயக்குமாருடன் ஜாலியாக இருந்ததை பார்த்து ஆத்திரத்தில் முருகன் அவரை கொலை செய்தாரா என்ற கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள ஜெயக்குமார், முருகன் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Karapakkam , Horrific murder of woman who was enjoying drunkenness in Karapakkam: Absconding husband, trap for cheater
× RELATED காரப்பாக்கத்தில் உள்ள சதுப்பு...