×

காரப்பாக்கத்தில் நள்ளிரவில் பயங்கரம்; மதுபோதையில் பெண் கொலை: 2வது கணவர் கைது; தொடர்பில் இருந்தவருக்கு வலை

துரைப்பாக்கம்: காரப்பாக்கத்தில் நள்ளிரவில், பெண் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2வது கணவர் கைது செய்யப்பட்டார். மேலும், பெண்ணுடன் தொடர்பில் இருந்தவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை காரப்பாக்கம் கந்தசாமி நாயக்கர் தெருவில் வசித்து வந்தவர் மல்லிகா (40). இவரது கணவர் இறந்து விட்டார். இவரது மூத்த மகன், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குளத்தில் மூழ்கி இறந்து விட்டார். இளைய மகன், தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கி, லாரி கிளீனராக வேலை செய்து வருகிறார். கணவர் இறந்த பிறகு, முருகன் என்பவரை மல்லிகா 2வதாக திருமணம் செய்து அவருடன் வசித்து வந்தார். இந்நிலையில், கண்ணகி நகரை சேர்ந்த ஜெயக்குமார் என்பவருடன் மல்லிகாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் கடந்த 5 ஆண்டுகளாக நீடித்தது. முருகன் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு வந்து மல்லிகாவுடன் ஜாலியாக இருந்து சென்றுள்ளார் ஜெயக்குமார். இந்நிலையில், நேற்றிரவு 11.30 மணியளவில் மல்லிகாவை பார்க்க அவரது இளைய மகன், வீட்டுக்கு வந்தார். அப்போது, முகம் மற்றும் தலையில் பலத்த காயத்துடன் மல்லிகா இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களும், உடலை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சம்பவம் குறித்து கண்ணகி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

முதல்கட்ட விசாரணையில், மல்லிகாவின் கணவர் கடந்த 18 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். அதற்கு பிறகு மூத்த மகனும் இறந்ததால் மிகுந்த சோகத்தில் இருந்துள்ளார். இளைய மகனும் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், முருகன் என்பவரை 2வதாக திருமணம் செய்து அவருடன் குடித்தனம் நடத்தி வந்தார் மல்லிகா. நாட்கள் உருண்டோட, கண்ணகி நகரை சேர்ந்த ஜெயக்குமார் என்பவருடன் மல்லிகாவுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது தனிமையில் இருந்துள்ளனர். நேற்றிரவும் மல்லிகா வீட்டுக்கு ஜெயக்குமார் வந்துள்ளார். இருவரும் மது அருந்தியுள்ளனர்.

அதற்கு பிறகுதான் மல்லிகா இறந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அதனால் ஜெயக்குமாருடன் ஏற்பட்ட தகராறில் மல்லிகா கொலை செய்யப்பட்டாரா அல்லது ஜெயக்குமாருடன் ஜாலியாக இருந்ததை பார்த்த ஆத்திரத்தில் முருகன் கொலை செய்தாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முருகன், ஜெயக்குமாரை தீவிரமாக தேடினர். இந்நிலையில் இன்று காலை முருகனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. ஜெயக்குமாரை வலைவீசி ேதடி வருகின்றனர். இச்சம்வத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Karapakkam , Midnight terror in Karapakkam; Drunken woman's murder: 2nd husband arrested; Web to contact
× RELATED காரப்பாக்கத்தில் உள்ள சதுப்பு...