×

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகம் இல்லை: தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம்

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகம் இல்லை என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பாதிப்பால் 17பேர் மட்டுமே சாதாரண வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட 3இடங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது எனவும் திருப்பத்தூர், தென்காசி, பெரம்பலூரில் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை எனவும் தமிழக சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது. தினசரி 3,000 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என செல்வ விநாயகம் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu ,Public Health ,Selva Vinayak , There are not many cases of corona virus in Tamil Nadu: Tamil Nadu Public Health Director Selva Vinayagam
× RELATED தமிழ்நாட்டில் தொடர் மழை பெய்து...