×

ஆரூத்ரா நிதிநிறுவன மோசடி: சிபிசிஐடி விசாரிக்க கோரிக்கை: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை: ஆரூத்ரா நிறுவனம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஹரிஸ் என்பவரும் பாஜவில் இணைந்து உடனேயே பாஜ மாநில விளையாட்டுப் பிரிவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆரூத்ரா நிதி நிறுவன மோசடி குற்றத்தில் சாதாரண ஏழை, எளிய மக்களிடம் ரூ. 2400 கோடி பணத்தை அபகரித்துக் கொண்ட கும்பலின் குற்றவாளியை தங்கள் கட்சியில் பாஜ இணைத்து கொண்டது. எனவே, இப்பெரும் நிதிமோசடிகள் குறித்து விரிவான விசாரணையை மேற்கொள்ள இவ்வழக்கினை சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

Tags : CPCID ,Marxist , Arutra Financial Institution Scam: CBCID Demands Probe: Marxist Insistence
× RELATED மின் உதவி பொறியாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மனு