×

என்எல்சி சுரங்க விரிவாக்க பணி தொடர்பாக நில அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்ட கரிவெட்டி கிராமத்தினர்

நெய்வேலி: என்எல்சி சுரங்க விரிவாக்க பணி தொடர்பாக நில அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை மக்கள் முற்றுகையிட்டனர். தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டு கரிவெட்டி கிராமத்தினர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

என்எல்சி சுரங்க விரிவாக்க பணி தொடர்பாக நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில் பல கிராம மக்கள் தங்களுக்கு முறையான நிவாரணம் வழங்கப்படுவதில்லை எனவும் நிரந்தர பணி வழங்கப்படுவதில்லை என தெரிவித்து நிலத்தை தர மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் கரிவெட்டி கிராமத்தில் நில அளவீடு செய்ய வந்த என்எல்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு தங்கள் கிராமத்தில் நில அளவீடு செய்ய கூடாது எனவும் நில அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்தும் அக்கிராமத்து மக்கள் தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டனர்.

கரிவெட்டி கிராம மக்கள் அதிகாரிகளை சூழ்ந்து முற்றுகையிட்டதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Karivetti ,NLC , People besieged the officials who came to take land survey regarding NLC mining expansion work
× RELATED கோடை காலத்தில் தங்கு தடையின்றி...