×

மழைநீர் வடிகால் கட்டுமான பணியால் ஈ.வெ.ரா சாலையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: மழைநீர் வடிகால் கட்டுமான பணி காரணமாக ஈ.வெ.ரா சாலையல் இன்று இரவு 10 மணி முதல் திங்கள் கிழமை அதிகாலை வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிப்பில் கூறியிருப்பதாவது: கோயம்பேடு சந்திப்பிலிருந்து சென்ட்ரல் நோக்கி செல்லும் ஈ.வெ.ரா சாலையில், சுதா ஓட்டல் முன்பு (நாயர் மேம்பாலம் பாயின்ட் மற்றும் தாசபிரகாஷ் பாயின்ட் சந்திப்புக்கு இடையில்) நெடுஞ்சாலை துறையினர் இன்று இரவு 10 மணி முதல் பள்ளம் தோண்டி சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால் கட்டுமான பணிகள் மேற்கொள்ள உள்ளதால், அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, இன்று இரவு 10 மணி முதல் 20ம் தேதி (திங்கள் கிழமை) காலை 5 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன் விவரம் வருமாறு: ஈ.வெ.ரா சாலையில் நாயர் மேம்பாலம் சந்திப்பிலிருந்து தாசபிரகாஷ் சந்திப்பை நோக்கி வரும் வாகனங்கள் எந்தவித மாற்றமின்றி நேராக செல்லலாம். ஈ.வெ.ரா சாலையில் தாசபிரகாஷ் சந்திப்பிலிருந்து நாயர் மேம்பாலம் சந்திப்பை நோக்கி நேராக செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் ஈ.வெ.ரா சாலையில்  தாச பிரகாஷ் பாயின்ட் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, ராஜா அண்ணாமலை சாலை வழியாக சென்று அழகப்பா சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அழகப்பா சாலை மறுபடியும் வலது புறம் திருப்பி நாயர் ேமம்பாலம் சந்திப்பு மற்றும் ஈ.வெ.ரா சாலை வழியாக செல்லாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : E. Ve Ra , Traffic diversion on E. Ve Ra road due to rain water drainage construction work
× RELATED மழைநீர் வடிகால் கட்டுமான பணியால் ஈ.வெ.ரா சாலையில் போக்குவரத்து மாற்றம்