×

முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: கேரள அரசு புதிய மனு

டெல்லி: முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து வெளிநாட்டு நிபுணர்கள் கொண்ட குழு அமைத்து ஆய்வு நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மனு தாக்கல் செய்துள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பை ஆய்வு செய்ய வேண்டும். இரு மாநில பிரதிநிதிகள் முன்னிலையில் அணை தொடர்பான ஆய்வு நடத்தப்பட வேண்டும். அணை பாதுகாப்பு சட்டம் 2021-ன் கீழ் நெறிகாட்டு முறைகள் படி பெரியாறு அணையை ஆய்வு செய்ய வேண்டும் என்று கேரள அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்துள்ளது.

Tags : Mullaperiyar ,Kerala govt , Mullaperiyar dam issue: Kerala govt new plea
× RELATED குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு...