ஊட்டி: தலித் விடுதலை கட்சியின் மாநில பொதுச்செயலாளர் செங்கோட்டையன் ஊட்டியில் நேற்று அளித்த பேட்டி: ஜெயலலிதா மரணம் இயற்கையானது அல்ல. முற்றிலும் செயற்கையானது. எனவே குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இதற்காக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, தினகரன் ஆகியோரிடம் முழுமையான விசாரணை நடத்த வேண்டும். இவர்கள் நான்கு பேரிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும். கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் பற்றி முழுமையாக விசாரிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கோத்தகிரி அருகே கொடநாடு எஸ்டேட்டில் இருந்து நாளை (18ம் தேதி) சென்னை மெரினா கடற்கரை நோக்கி வாகன பேரணி துவங்குகிறது. இப்பேரணியில் 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.