×

சீமானை கைது செய்யக்கோரி அருந்ததியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

தண்டையார்பேட்டை: அருந்ததியர் கூட்டமைப்பு சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அருந்ததியர் மக்கள் பேரவை தலைவர் குருவை குமார் தலைமை வகித்தார். தலித் சேனா மாநில தலைவர் நாகேந்திரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது சீமானை கண்டித்தும், தமிழக அரசும், காவல்துறையும் உடனடியாக சீமானை கைதுசெய்ய கோரி கோஷமிட்டனர்.  

அப்போது தலித்சேனா மாநில தலைவர் நாகேந்திரன் பேசும்போது, அருந்ததியர் இனத்தை கொச்சைப்படுத்தும் விதமாக சீமான் பேசியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது கட்சியை தடை செய்ய வேண்டும். சைமன் என்ற பெயரை வைத்துக்கொண்டு அவர் நாடகம் நடத்தி வருகிறார். அவரை கைதுசெய்யும் வரை போராட்டம் தொடரும் என்றார். ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.




Tags : Kori Aruthathyar Federation ,Seeman , Arundhatiyar Federation protest to arrest Seeman
× RELATED தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல்...