×

திமுகவில் இருந்து 4 பேர் தற்காலிக நீக்கம்: துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திமுகவில் இருந்து காஜாமலை விஜய் உள்ளிட்ட 4 பேர் தற்காலிக நீக்கம் செய்யப்படுவதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திருச்சி மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைச் செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், மாவட்ட துணைச் செயலாளர் தி.முத்துசெல்வம், மாவட்டப் பொருளாளர் எஸ்.துரைராஜ், 55வது வட்டச் செயலாளர் வெ.ராமதாஸ் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி (Suspension) வைக்கப்படுகிறார்கள். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


Tags : dimugu ,Tremurugan , 4 people suspended from DMK: Duraimurugan announcement
× RELATED திமுகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சு...