×

பிரதமர் திறந்து வைத்த பெங்களூரு - மைசூரு நெடுஞ்சாலையில் பயணிக்க ரூ.15 - ரூ.20 வரை கட்டணம் நிர்ணயம்

பெங்களூரு: பிரதமர் மோடி திறந்து வைத்த பெங்களூரு - மைசூரு இடையிலான விரைவு நெடுஞ்சாலையில் பயணிக்கும் அரசு பேருந்துகளுக்கு ரூ.15 முதல் ரூ.20 வரை கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பெங்களூரு - மைசூரு இடையே அமைக்கப்பட்டுள்ள விரைவு நெடுஞ்சாலையை பிரதமர் மோடி கடந்த வாரம் திறந்து வைத்தார்.

அதன் பின் இந்த நெடுஞ்சாலையில் கார் உள்ளிட்ட வாகனங்களுக்கான சுங்க கட்டணம் வெளியானது. சுங்கக்கட்டணம் அதிகமாக இருப்பதாக  காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் கர்நாடக போக்குவரத்து துறை மற்றொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பெங்களூரு நிதகட்டா வரையிலான முதற்கட்ட விரைவு நெடுஞ்சாலையில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் பயணிப்பவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகளின் தன்மைக்கு ஏற்ப ரூ.15 முதல் ரூ.20 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. சுங்கக்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் அதை சரிக்கட்டும் விதமாக பேரூந்துகட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் இந்த வழித்தடத்தில் பயணிக்கும் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


Tags : Bangalore-Mysore , Prime Minister, Bengaluru-Mysore Expressway, toll fixing
× RELATED கர்நாடகாவில் பெங்களூரு-மைசூரு...