×

திருவள்ளூர் அருகே 23ம் தேதி திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: அமைச்சர் சா.மு.நாசர் அறிவிப்பு

ஆவடி: திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக நிர்வாகிகளின் அவசர ஆலோசனை கூட்டம் திருவள்ளூர் அருகே வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. இதில் மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் உள்பட அனைத்து அணிகளின் நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என மாவட்ட செயலாளரும் அமைச்சருமான சா.மு.நாசர் அறிவித்துள்ளார். திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுகவின் மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் மற்றும் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம், திருவள்ளூர் அருகே காக்களூர் பைபாஸ் சாலையில் உள்ள ஆர்எம்கே விருந்தினர் மாளிகையில் வரும் 23ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட அவைத்தலைவர் மா.ராஜி தலைமையில் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினரும் பூவிருந்தவல்லி எம்எல்ஏவுமான ஆ.கிருஷ்ணசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஜே.ரமேஷ், மாநில மாணவரணி இணை செயலாளர் சி.ஜெரால்டு, மாநில இளைஞரணி துணை செயலாளர் பிரபு கஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் வி.ஜெ.சீனிவாசன், எஸ்.ஜெயபால், காயத்ரி ஸ்ரீதரன், மாவட்ட பொருளாளர் நரேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் த.எத்திராஜ், ஜி.ராஜேந்திரன், கு.விமல்வர்ஷன், எம்.முத்தமிழ்செல்வன். வி.குமார், ஜெ.மகாதேவன், எஸ்.காஞ்சனா சுதாகர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.முன்னதாக, திருவள்ளூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன் வரவேற்கிறார்.

இக்கூட்டத்தில், திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் வரும் 22ம் தேதியன்று கழகத்தின் ஆக்கப் பணிகள் குறித்து நடைபெறும் அனைத்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதுதொடர்பாக திருவள்ளூர் மத்திய மாவட்டத்தில் நடைபெற்று வரும் கழகத்தின் ஆக்கப்பணிகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதித்து தீர்மானிக்கப்படுகிறது. இதில் மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் உள்பட அனைத்து நிர்வாகிகளும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என மாவட்ட செயலாளரும் அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் அறிவித்துள்ளார்.


Tags : DMK ,Tiruvallur ,Minister ,S.M. ,Nasar , Thiruvallur, 23rd, DMK executive, consultative meeting, Minister S.M. Nasar, announcement
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...