×

இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் விபரீதம் 13 வயது சிறுமியை கடத்திய சிறுவன்: போக்சோ சட்டத்தில் கைதானார்

பெரம்பூர்: அயனாவரத்தில் இன்ஸ்டாகிராம் மோகத்தால் 13 வயது சிறுமியை கடத்திச் சென்ற சிறுவன் போக்சோ சட்டத்தில் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சமூகவலைத்தள பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறுவர்கள் அதிகம் மூழ்கி முன்பின் தெரியாதவர்களை தேடிச் சென்று காதல் வயப்படும் சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகின்றன. அந்த வகையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த 8ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி, இன்ஸ்டாகிராம் நண்பனை பார்க்க சேலம் பகுதிக்குச் சென்று, அதன்பின்பு போலீசார் அந்த சிறுமியை மீட்டனர். அந்த வகையில் தற்போது அயனாவரம் பகுதியில் அப்படி ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.


அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் (30) வயது பெண். இவர் கடந்த 6ம் தேதி மதுரையில் உள்ள உறவினர் வீட்டு இறுதிச் சடங்கிற்கு செல்வதற்காக சென்றுள்ளார். அப்போது தனது 13 வயது மகளை பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம், பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டுச் சென்றுள்ளார். மீண்டும் 9ம் தேதி இரவு ஊரிலிருந்து வந்து பார்த்தபோது, அச்சிறுமி வீட்டில் இல்லை. இதுகுறித்து அக்கம் பக்கத்தில் விசாரித்த போது, அவர்கள் தங்களுக்குத் தெரியாது எனக் கூறியுள்ளனர். இதுகுறித்து சிறுமியின் தாய் அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தேவிகா வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டார்.
சிறுமியின் செல்போனை தொடர்புகொண்டு பேசியபோது அதில், பேசிய நபர் சிறுமியை கொண்டுவந்து விட்டுவிடுவதாக தெரிவித்துள்ளார். அதன் பிறகு சிறுமியை கடந்த 10ம் தேதி அயனாவரம்

பஸ்டிப்போ அருகே அந்த நபர் விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். அதன் பிறகு போலீசார் சிறுமியை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து சிறுமியிடம் மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, சிறுமி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வியாசர்பாடியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுடன் பழகியதும், வீட்டில் ஆள் இல்லை என்று தெரிந்ததும் சிறுமியை அந்த சிறுவன் வந்து அழைத்துச் சென்று, அவனது வீட்டில் தங்க வைத்ததும் தெரியவந்தது. மேலும் சிறுமிக்கு குறிப்பிட்ட அந்த சிறுவன் பாலியல் தொந்தரவு கொடுத்ததும் தெரியவந்தது. இதனையடுத்து நேற்று சிறுவனை கைது செய்த அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், அவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். 


Tags : Instagram ,Boxo , Boy who kidnapped 13-year-old girl due to Instagram habit: Arrested under POCSO Act
× RELATED படப்பிடிப்பில் பிரியங்கா சோப்ரா படுகாயம்