×

தி.மலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் 6வது குற்றவாளியை கைது செய்தது தனிப்படை போலீஸ்..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி 4 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடிக்கப்பட்டது. சுமார் ரூ.75 லட்சத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர் பயன்படுத்திய கார் மற்றும் அதிலிருந்து இறங்கி செல்லும் நபர் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இதனையடுத்து 9 தனிப்படைகள் அமைத்து பெங்களூரு, ராஜஸ்தான், டெல்லி, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் அரியானா உள்ளிட்ட பல பகுதிகளில் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
 
இதுவரை இச்சம்பவம் தொடர்பாக அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஆரிப், முகமது ஆசாத், குதரத் பாஷா, அப்சர், நிஜாமுதீன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது 6வது குற்றவாளியாக ராஜஸ்தானை சேர்ந்த சிராஜீதின் என்ற நபரை கர்நாடக எல்லையில், தனிப்படை போலீஸ் கைது செய்துள்ளது. சிராஜீதீன் விசாரணைக்காக திருவண்ணாமலை அழைத்து வரப்படவுள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைது எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags : Dt. Mountain ATM , T. Malai ATM robbery, 6th accused, arrested
× RELATED ஜூன் 2வது வாரம் கூடுகிறது தமிழக...