×

வியாசர்பாடி பகுதி கடைகளில் புகைபோக்கி மின்விசிறி திருடிய வாலிபர் கைது

பெரம்பூர்: வியாசர்பாடி எஸ்.ஏ.காலனி, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை பகுதியில் வசித்து வருபவர் முகமது தபிஷ்ரக் (21). இவர் அதே பகுதியில் சொந்தமாக டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலை இவர், கடையை திறக்க வந்தபோது, கடையின் மேல் பகுதியில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த புகைபோக்கி மின்விசிறி திருடுபோனது தெரிந்தது. இதுகுறித்து அவர் எம்.கே.பி. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்தனர். அதில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நமச்சிவாயன் (23) என்பவர், டீக்கடையில் உள்ள புகைபோக்கி மின்விசிறி திருடியதை ஒப்புக்கொண்டார். இதேபோல், அங்குள்ள சில கடைகளின் புகைபோக்கி மின்விசிறியை திருடி, அதை இரும்பு கடைகளில் விற்றது தெரியவந்தது. இதனையடுத்து நமச்சிவாயன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Vyasarpadi , Youth arrested for stealing chimney fan from shops in Vyasarpadi area
× RELATED செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது...