×

இன்ஸ்டாகிராமில் பழகி சிறுமியை ஏமாற்றிய வாலிபர் கைது

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள நேமம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி மகன் சக்திவேல்(19). இவருக்கும், நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், கடந்த 6 மாதங்களுக்கு முன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 26ம் தேதி சிறுமி தனது வீட்டிற்கு தெரியாமல் புறப்பட்டு சக்திவேல் வீட்டிற்கு வந்துள்ளார். தொடர்ந்து சக்திவேல் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அவரிடம் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். மகளை காணாது பெற்றோர் பல இடங்களில் தேடி வந்தனர்.

இந்நிலையில் கடலூரில் இருப்பதை அறிந்த சிறுமியின் பெற்றோர் கடலூர் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் சமூக நலத்துறை அதிகாரிகள் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிறுமியை மீட்டனர். தொடர் விசாரணைக்கு பின்னர் சக்திவேலுவை போக்சோவில் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.



Tags : A teenager who cheated a girl on Instagram was arrested
× RELATED தகாத உறவு விவகாரத்தில் இளம்பெண்...