×

திருவாரூர்- திருவண்ணாமலைக்கு 2ஆயிரம் டன் நெல் மூட்டைகள் சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு

திருவாரூர்: திருவாரூரிலிருந்து திருவண்ணாமலைக்கு மாவட்டத்தின் பொது விநியோக திட்ட அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் ரயில் மூலம் அனுப் பும் பணி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் கடந்தாண்டில் குறுவை மற்றும் சம்பா பருவத்தில் விவசாயிகளிடமிருந்து 7 லட்சத்து 65 ஆயிரம் மெ.டன் அளவில் நெல் கொள் முதல் செய்யப்பட்ட நிலையில் நடப்பாண்டில் குறுவை பருவத்தில் 4 லட்சம் மெ.டன்னும், சம்பா பருவத்தில் தற்போது வரையில் மூன்றரை லட்சம் மெ. டன்னும் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நெல்கள் அனைத்தும் 40 கிலோ எடை கொண்ட மூட்டைகளாக கட்டப்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள நுகர் பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான கிடங்குகள் மற்றும் திறந்தவெளி கிடங்குகள் ஆகியவற்றில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் இவைகளிலிருந்து தினந்தோறும் சுமார் ஆயிரம் டன் அளவில் மாவ ட்டம் முழுவதும் உள்ள 26 நவீன அரிசி ஆலைகளுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு அரிசியாக அரைக்கப்படும் பணிகளும் நடைபெற்று வரும் நிலையில் வெளி மாவட்டங்களின் பொது விநியோக திட்டத்திற்காகவும் அரிசி மற்றும் நெல்கள் ரயில் மூலம் அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து திருவண்ணாமலை க்கு மாவட்டத்தின் பொது விநியோக திட்ட அரவைக்காக 42 வேகன்களில் 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகளை அனுப்பும் பணியில் தொழிலாளர்கள் ஈடுப்பட்டனர்.

Tags : Thiruvarur- Thiruvandamalai , Thiruvarur- Thiruvannamalai, 2000 tons of rice bundles, sent by freight train
× RELATED தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4ம் தேதி...