×

ஆடைகளை உற்பத்தி செய்யும் நெசவாளர்களுக்கு உதவி செய்வதை நான் எனது கடமையாக கருதுகிறேன்: கோவையில் பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

கோவை: விசைத்தறியளர்களுக்கான 750 யூனிட் இலவச மின்சாரத்தை 1,000 யூனிட்டாக உயர்த்தி வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்கம் சார்பில் கருமத்தம்பட்டி நால்ரோடு பகுதியில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவில் ஆடைகளை உற்பத்தி செய்யும் நெசவாளர்களுக்கு உதவி செய்வதை நான் எனது கடமையாக கருதுகிறேன்.

மேலும் முதல்வர் ஆற்றிய உரையில்; தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களுடைய கூட்டமைப்பு சார்பில் உங்களுக்கு நன்றி அறிவிக்கக்கூடிய பாராட்டு விழா நடத்த இருக்கிறோம், அதற்கு நீங்கள் தேதி வழங்கிட வேண்டும் என்று இந்த மாவட்டத்தின் அமைச்சர், மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி என்னிடத்தில் கேட்டபோது, எதற்கு நன்றி தெரிவிக்கிறார்கள் என்று நான் கேட்டேன்.

விசைத்தறிக்கு மின்கட்டண சலுகை வழங்கியதற்காக நன்றி தெரிவிக்க இருக்கிறார்கள் என்று அவர் சொன்னார். இதில் நன்றி தெரிவிக்க என்ன இருக்கிறது, நான் என் கடமையைத் தான் செய்திருக்கிறேன், கலைஞர் வழியில் செய்திருக்கிறேன் என்று அவரிடம் நான் சொன்னேன். கைத்தறியாக இருந்தாலும் விசைத்தறியாக இருந்தாலும் ஆடைகளை உற்பத்தி செய்கின்ற நெசவாள தோழர்களுக்கு உதவி செய்வதை நான் என்னுடைய கடமையாகத்தான் கருதுகிறேன். இன்றைக்கு மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிய காலம் முதல் நெசவாளர் துயர் துடைக்க எப்போதும் தயாராக இருக்கும் இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம்.

திராவிட முன்னேற்றக் கழகம் 1949ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்தக் காலகட்டத்திலேயே நெசவாளர்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தார்கள். கைத்தறி ஆடைகள் விற்காமல் தேங்கி இருந்தது. அவர்களுடைய துயர் துடைக்க, 1953-ஆம் ஆண்டு ஜனவரி 4-ஆம் நாள் கைத்தறி ஆதரவு நாள் என்று கொண்டாடியது திராவிட முன்னேற்றக் கழகம்.

கைத்தறி நெசவாளர்களின் துயர் துடைப்பதற்காக அவர்களிடம் துணியைப் தோளில் தூக்கிச் சென்று தெருத்தெருவாக விற்றுக் கொடுத்த இயக்கம் பெற்று தான் திராவிட முன்னேற்றக் கழகம். கைத்தறித் துணிகளை வாங்க வேண்டும், கைத்தறி துணிகளை அனைவரும் அணிய வேண்டும் என்பதை இயக்கமாகவே ஆக்கிய இயக்கம் தி.மு.கழகம்.

திருச்சி வீதிகளில் பேரறிஞர் அண்ணா கைத்தறி ஆடைகளை சுமந்துகொண்டு விற்றுக் கொடுத்தார். தலைவர் கலைஞர் சென்னை வீதிகளில் விற்பனை செய்தார். கலைஞர் மட்டும் 20 ஆயிரம் ரூபாய்க்கு அன்றைக்கு விற்றுக் கொடுத்தார். ஒரே நாளில் தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

1950-களில் ஒரு லட்சம் ரூபாய் என்பது எவ்வளவு பெரிய தொகை என்பது மூத்த தோழர்களுக்கெல்லாம் தெரியும். 10 கிராம் தங்கள் 99 ரூபாய் என்று இருந்த காலம் அது. செந்தமிழ் நாட்டு கைத்தறி நெசவு சேலைகள், வேட்டிகளை வாங்கவே நம் திராவிட நாட்டினர் ஷேமம் வேண்டி சிங்கார ஆடை வாங்குவீர் என்ற உடுமலை நாராயண கவியின் பாட்டை விற்றுக் கொடுத்தார். கழகத்தினர் அனைவரும் கைத்தறி துணிகள்தான் அணிய வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. கழகத்தின் இருவண்ணக் கொடி போட்ட வேட்டிகளும் சேலைகளும் அதன்பிறகு அதிகமாகத் தயார் ஆனது.

தஞ்சையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணி வழங்க கழகம் முடிவெடுத்தது. தலைவர் கலைஞர் அவர்கள், கைத்தறி துணிகளை வாங்கித்தான் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய மக்களுக்கு அன்றைக்கு வழங்கினார். ஒரே நேரத்தில் இரண்டு நன்மைகள் நடந்தது, பாதிக்கப்பட்ட நெசவாளர்களுக்கு துணி விற்பனை ஆனது, பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கும் துணிகளை பெற்றுத் தந்தார்கள். அப்படி ஒரே நேரத்தில் இரண்டு நன்மைகள் செய்த இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்.

இந்த வரலாற்றையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டுதான் நம்முடைய அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்கள் என்னிடத்தில் தேதியை கேட்டபோது, என் கடமையைத்தான் செய்திருக்கிறேன் என்று நான் சொன்னேன்.கழகம் எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொழுதெல்லாம் நெசவாளத் தொழிலுக்கு உதவி செய்யப்பட்டது என்பதை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள்.

* காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு சரிகை நிறுவனம் 1971ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. ஈரோட்டில் தமிழ்நாடு கூட்டுறவு பதனிடும் ஆலை 1973-இல் துவக்கப்பட்டது. கூட்டுறவு கைத்தறி நெசவாளர்களுக்கான சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம் 1975 முதல் செயல்படுத்தப்பட்டது.
* நெசவாளர் முதியோர் ஓய்வூதியத் திட்டம் முதன்முதலாக ஆண்டுதான் தொடங்கப்பட்டது. மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. கொண்டிருக்கிறார்கள். அறிவிக்கப்பட்டது. 20 26,433 விழுக்காடு ஓய்வூதியமாக நெசவாளர்கள் தள்ளுபடி 1997 1000 இதனைப் 1998 ஆம் ஆம் ரூபாய் பெற்றுக் ஆண்டு
* உழவர்களுக்கு இருப்பதைப் போல கைத்தறி நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் 2006-ஆம் ஆண்டு கழக அரசால் கொண்டுவரப்பட்டது.
* நெசவாளர்கள் ஹட்கோ நிறுவனத்திடம் பெற்ற வீட்டுக் கடன் தொகை அனைத்தையும் 2008 ஆம் ஆண்டில் கழக அரசு தள்ளுபடி செய்தது.
இந்த வரிசையில்தான் இப்போது அமைந்துள்ள திராவிட மாடல் அரசானது பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

கொரோனா காலக்கட்டத்தில் பல்வேறு தொழில்கள் நசிந்து போயின. அதற்கு நெசவுத் தொழிலும் விதிவிலக்கு அல்ல. அடுத்து, நூல் விலை உயர்ந்தது. இந்த கட்டணமும் இல்லாமல் இந்தத் தொழிலை செய்யக்கூடிய ஒரு அரிய நிலை இன்று உருவாக்கப்பட்டிருக்கிறது.

விசைத்தறிகளுக்கான மின் கட்டணத்தை 50 விழுக்காடு குறைத்து ஒரு யூனிட்டிற்கு 70 பைசா மட்டுமே எனக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு கணிசமான தொகை இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மிச்சம் ஆகும்.

மேலும், இந்தத் தொழிலை வளர்ச்சி அடைய வைப்பதற்கான பெரும் முயற்சியைத் தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது. இந்தியாவில் உள்ள 24 லட்சத்து 6 ஆயிரம் விசைத்தறிகளில், நமது மாநிலத்தில் மட்டும் 5 லட்சத்து 63 ஆயிரம் விசைத்தறிகள் இருக்கிறது. இதில் 10 இலட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் அனைவரையும் காக்கும் கடமை அரசுக்கு உண்டு. திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு உண்டு.

உங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் நான் படித்துப் பார்த்தேன்.வேளாண்மை, கைத்தறி போல விசைத்தறிகளுக்கும் அரசின் உதவிகள் வேண்டும் என்று சொல்கிறீர்கள். அப்படி நினைப்பதால்தான் மின் கட்டணச் சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் எல்லோரும் ஏற்றுக் கொள்வீர்கள் என நான் நினைக்கிறேன்.
* விசைத்தறிகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் நூல் விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்திருக்கிறீர்கள். நிச்சயமாக, உறுதியாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அரசின் அனைத்துத் துறைகளுக்கும் தேவையான துணிகளை விசைத்தறிகள் மூலமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறீர்கள்.அரசின் சார்பில் அமைக்கப்படும் குழுக்களில் நெசவாளர்கள் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கேட்டிருக்கிறீர்கள்.
* ஒன்றிய அரசின் கைத்தறி உற்பத்தி ரக ஒதுக்கீட்டு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்திருக்கிறீர்கள். நீங்கள் வைத்திருக்கக்கூடிய இந்தக் கோரிக்கைகளெல்லாம் பரிசீலிக்கப்பட்டு அவை முறையாக படிப்படியாக ஆனால் அதே நேரத்தில் உறுதியோடு நிறைவேற்றப்படும் என்ற அந்த உறுதியை நான் இந்த மாநாட்டில் விரும்புகிறேன். அறிவிக்க இதுவரை சொன்னதையெல்லாம், நீங்கள் வைத்த கோரிக்கைகளையெல்லாம் பற்றி சொன்னேன். ஆனால் நீங்கள் வைக்காத கோரிக்கை ஒன்றையும் நான் இப்போது நிறைவேற்றப் போகிறேன்.

அது என்ன என்று கேட்டீர்களென்றால், அது என்னவென்றால், ஜவுளித்துறைக்கு ஆணிவேராக விளங்குவது நெசவுத்துறை. ஜவுளித்துறையில் இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து திகழ்ந்திடும் வகையில், மாநிலமெங்கும் பல இடங்களில் ஜவுளிப் பூங்காக்களை உருவாக்கிட இந்த அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

அந்த வகையில், மேற்கு மண்டலத்தில் அடுத்தாக ஒரு ஜவுளிப் பூங்கா அமைக்கப்பட இருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.நெசவுத்தொழிலுக்கு உரிய முக்கியத்துவத்தை வழங்கிடும் வகையில், தறித் தொழிற்சாலைகளுக்குத் தனி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இவற்றிற்கான அனைத்து பொதுக்கட்டமைப்பு வசதிகளும் அளிக்கப்படும். இதன் மூலமாக ஜவுளிப் பணிகளை ஒரே இடத்தில் மேற்கொள்ள இயலும்!

இது எனது அரசு அல்ல, நமது அரசு, ஏன், உங்கள் அரசு. உங்களுக்காக உழைக்கத்தான் நான் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறேனே தவிர வேறல்ல. இது மக்களுக்கு நன்றாகத் தெரியும். அதனுடைய அடையாளம்தான் நம்முடைய இளங்கோவன் அவர்கள் குறிப்பிட்டுச் சொன்னரே ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல், அதில் வெற்றி, சாதாரண வெற்றியா அது? திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக்கு கிடைத்த மகத்தான வெற்றி, மக்கள் தேடிக் கொடுத்திருக்கிறார்கள்.

66,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக இருந்த நம்முடைய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார் என்று சொன்னால், கடந்த சட்டமன்றத் தேர்தலில் 10,000-க்கும் கீழ் வித்தியாசத்தில் நாம் வெற்றி பெற்றோம். இப்போது 66,000 வாக்குகள் வித்தியாசம், இது எதைக் காட்டுகிறது? இது மக்களுக்கு இந்த அரசின் மீது இருக்கக்கூடிய மகத்தான நம்பிக்கையை எடுத்துக் காட்டுகிறது.

கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் மேற்கு மண்டலத்தில் நாம் எதிர்பார்த்த வெற்றியை நாம் பெற முடியவில்லை என்பது உண்மைதான். ஆனால் இப்போது அந்த நிலைமை மாறிவிட்டது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளும் அண்மையில் நடைபெற்று முடிந்த இடைத்தேர்தலிலும் நாம் அடைந்த வெற்றி. ஈரோடு கிழக்கு தொகுதியின் மேற்கு மண்டலத்தில் நாங்கள் செல்வாக்கானவர்கள் என்று மார்தட்டிக் கொண்டிருந்த அதிமுக ஆட்சியானது கடந்த பத்தாண்டு காலத்தில் இந்த மண்டலத்திற்கு என்ன சாதனை செய்திருக்கிறது என்று கேட்டால், ஒன்றும் கிடையாது. தொழில் வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை. புத்தாக்கத் தொழில்களை உருவாக்கவில்லை.

ஆனால் நம்முடைய ஆட்சியில், கழக ஆட்சியில் ஏராளமான தொழில்களை கொண்டு வந்திருக்கிறது. பெரிய தொழில்கள் மட்டுமல்ல சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களையும் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறோம். இத்தொழில்களின் மூலமாக ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டு இளைஞர்கள் வேலை பெற்றிருப்பதோடு, பிற மாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டுக்கு வேலை தேடி வருகிறார்கள்.

இப்படி தமிழ்நாடு என்பது தொழில்வளர்ச்சியில் சிறந்த அமைதியான அனைவருக்கும் வாழ்வு தரும் மாநிலமாக இருப்பது சிலரது கண்களுக்கு பொறுக்கவில்லை. நம்முடைய தலைவர் கலைஞர் கதை வசனம் எழுதிய புதையல் திரைப்படத்தில் நெசவுத் தொழிலை பாராட்டி ஒரு பாடல் வரும். அதனை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் .

அந்த பாடலை எழுதுவதற்காக ஒருமாத காலம் காஞ்சிபுரத்திற்குச் சென்று நெசவாளர் வீட்டில் தங்கி அந்தத் தொழிலை எப்படி செய்கிறார்கள் என்று தெரிந்துகொண்டு, அதற்குப் பிறகு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் அந்தப் பாடலை எழுதினார் என்று சொல்வார்கள், இது வரலாறு. என்ன பாட்டு என்று கேட்டீர்களானால், சின்னச் சின்ன இடை பின்னிப்பின்னி வரும் சித்திரை கைத்தறி சேலையடி நம் தென்னாட்டில் எந்நாளும் கொண்டாடும் வேலையடி. இந்தப் பாடல் தான்.

சின்னச் சின்ன இடை பின்னிப்பின்னி வரும் சித்திரை கைத்தறி சேலையடி தென்னாட்டில் எந்நாளும் கொண்டாடும் வேலையடி – அந்தப் பாட்டு தொடங்கும். நம் ஒற்றுமையோடு அத்தனை நூலும் ஒழுங்கா வந்தா வளரும் இதில் ஒரு நூலறுந்தால் குழறும் இதை ஓட்டும் ஏழை கூட்டுறவாலே உலகில் தொழில்வளம் உயரும் இந்த எழுதியிருப்பார். உலகில் தொழில்வளம் உயரும் என்று பட்டுக்கோட்டையார் அப்படி ஒற்றுமையாக மக்கள் அனைவரும் வாழக்கூடிய நம்முடைய மூலமாக மாநிலம்தான் தமிழ்நாடு. அதனைச் சிலர் சிதைக்கப் பார்க்கிறார்கள்.

வதந்திகள் பொய்களை பரப்பி இந்த ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்தப் பார்க்கிறார்கள், முயற்சிக்கிறார்கள். அத்தகைய வதந்திகள் வேகத்தில் அமுக்கப்பட்டு விடுகின்றன. பொய்கள் அனைத்தும் எழுந்த உழவர்களுக்கு நெசவாளர்களுக்கு இளைஞர்களுக்கு மாணவர்களுக்கு பெண்களுக்கு விளிம்பு நிலை மக்களுக்கு மக்களுக்கு இந்த ஆட்சி தினந்தோறும் செய்து வரும் நலத் திட்ட உதவிகளில் ஏழை எளிய இருந்து மக்களைத் திசை திருப்ப அவர்கள் செய்யக்கூடிய தந்திரங்கள் இதுபோன்ற பொய்களும் வதந்திகளும்.

நான் சொல்லுகிறேன், எனது பொது வாழ்க்கையில் இதுபோன்ற எத்தனையோ பூச்சாண்டிகளைப் பார்த்தவன் நான். கலைஞருடைய மகன் நான். முத்துவேல் கருணாநிதி மகன் ஸ்டாலின் நான். எனவே, இந்த சலசலப்புக்கெல்லாம் இந்த ஸ்டாலின் அஞ்ச மாட்டான். போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும். தொடர்ந்து செல்வேன். மக்கள் சேவை ஆற்றுவேன். எனக்கு நீங்கள் அளிக்கக்கூடிய பாராட்டு என்பது இத்தோடு என் கடமை முடிந்துவிட்டது என்பதற்காக அளிக்கிற பாராட்டு அல்ல, இன்னும் பணி ஆற்று, இன்னும் தொடர்ந்து ஆற்று, இன்னும் எங்களுக்கு கடமையை நிறைவேற்றித் தா என்று சொல்வதற்காக நடைபெறக்கூடிய பாராட்டு விழாவாகத்தான் நான் கருதுகிறேன். எனவே, உங்கள் பாராட்டுகள் மேலும் எனக்கு உரம் அளிப்பதாக அமைந்திருக்கிறது.

தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து விசைத்தறி சங்கங்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை மீண்டும் ஒருமுறை தெரிவித்து உங்கள் அனைவருக்கும் நன்றிகூறி விடைபெறுகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாடினார்.

Tags : Md. ,G.K. Stalin , I consider it my duty to help weavers who produce garments: Chief Minister M K Stalin's speech at an appreciation function in Coimbatore
× RELATED காட்டுவாசியாக நடிக்கிறார் பீட்டர் ஹெய்ன்