×

திருவள்ளூர் அடுத்த வெங்கத்தூர் கண்டிகையில் தீடீரென தீ பிடித்த கண்டெய்னர் லாரி: மணவாளநகர் போலீசார் விசாரணை

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த வெங்கத்தூர் கண்டிகை பகுதியில் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு நேற்று காணொளி காட்சி மூலம் திறக்கப்பட்டது. இந்நிலையில் பாஜக அலுவலகம் அருகிலேயே சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரி நேற்று முன்தினம் நள்ளரவில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணவாளநகர் போலீசார் மற்றும் திருவூர் தீயணைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் என்ஜினின் முன்பக்கம் முழுவதும் எரிந்து சேதமானது.

இதனையடுத்து  பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகம் நேற்று திறக்க உள்ள நிலையில், சாலை ஓரத்தில் அலுவலகம் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரியின் முன் பகுதியில் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லாரி எஞ்சின் கோளாறு காரணமாக தீப்பற்றி எரிந்ததா அல்லது மர்ம நபர்கள் யாரேனும் தீயிட்டு கொளுத்தினார்களா என்ற கோணத்தில் மணவாளநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Tags : Venkathur Kandigai ,Tiruvallur ,Manavalanagar , Container lorry that caught fire at Venkathur Kandigai next to Tiruvallur: Manavalanagar Police investigating
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...