×

பாக். டிரோனை சுட்டு வீழ்த்திய பி.எஸ்.எப்

புதுடெல்லி: இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் டிரோனை எல்லை பாதுகாப்பு படையினர்(பிஎஸ்எப்) சுட்டு வீழ்த்தினர். இதுகுறித்து பிஎஸ்எப் அதிகாரி கூறும்போது ,‘‘பஞ்சாப்பின், குர்தாஸ்பூர் மாவட்டம், மெட்லா  கிராமத்தில் நேற்று மதியம் ஒரு மணிக்கு பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் இருந்து டிரோன் பறந்து வந்தது. பிஎஸ்எப் வீரர்கள் அதை சுட்டு வீழ்த்தினர். அதில், ஏகே ரைபிள் மற்றும் ஏராளமான தோட்டாக்கள் இருந்தன. அதே போல், நபி நகர் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் ஒரு டிரோன் மற்றும் ஏகே துப்பாக்கி மற்றும் 40 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன’’ என்றனர்.

Tags : BSF , Pak. BSF shot down the drone
× RELATED இந்திய – வங்கதேச எல்லையில்...