கடலூர்: என்எல்சி விவகாரம் தொடர்பாக தடையை மீறி வளையமாதேவி கிராமத்திற்குள் செல்ல முயன்ற அதிமுக எம்.எல்.ஏ. அருண்மொழி தேவன் கைது செய்யப்பட்டார். வளையமாதேவி கிராமத்தில் என்எல்சிக்காக நிலம் கையகப்படுத்த அதிமுக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. வளையமாதேவி கிராமத்தில் மக்கள் எதிர்ப்பை மீறி நிலம் கையகப்படுத்தும் பணிக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.