×

நாகர்கோவிலில் வாலிபர் நிர்வாண உலா

நாகர்கோவில்: நாகர்கோவிலில் நள்ளிரவில் வாலிபர் நிர்வாணமாக உலாக வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாகர்கோவில் வடசேரியில் உள்ள தெரு ஒன்றில், கடந்த 2 நாட்களுக்கு முன் நள்ளிரவில் 35 வயது வாலிபர், காரில் இருந்து நிர்வாண கோலத்தில் இறங்கினார். அப்படியே நடுரோட்டில் அங்கும், இங்கும் அலைந்த நபர், பின்னர் காரில் ஏறி சென்றார். இந்த கார் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் (சன் கன்ட்ரோல் பிலிம்) ஒட்டப்பட்டு உள்ளது. நிர்வாண கோலத்தில் தான் காரையும் ஓட்டி வந்துள்ளார்.

தெருவுக்குள் காரை நிறுத்தி பெண்ணுடன் உல்லாசமாக இருப்பதற்காக வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. வாலிபர் நிர்வாணமாக நடமாடும் காட்சிகள், அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. நிர்வாணமாக இறங்கி உலா வந்த வாலிபர் யார்? காருக்குள் உண்மையிலேயே பெண் இருந்தாரா? அல்லது அந்த வாலிபர், காதலி வீட்டுக்கு செல்வதற்காக நிர்வாண நிலையிலேயே காரில் வந்தாரா? என்பன போன்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. காரில் இருந்து நிர்வாணமாக தள்ளாடிய படி செல்வதால் குடிபோதையில் இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.  




Tags : Nagercoil , Teenage nude walk in Nagercoil
× RELATED நாகர்கோவிலில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குளோரின் வாயு கசிவு