சென்னை: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து ஏர் ஏசியா பயணிகள் விமானம் நேற்று முன்தினம் இரவு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த சென்னையைச் சேர்ந்த பயணி வைத்திருந்த பிளாஸ்டிக் கூடைகளில் 4 வெளிநாட்டு குரங்குகள் இருந்தன. இந்த ரக குரங்குகள் தென் அமெரிக்காவில் அதிகமாக வனப்பகுதிகளில் வசிப்பவை என்பதும் அனுமதி சான்றிதழ் பெறாமல் இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.