×

இந்தியாவின் கொரோனா நிலவரம்: ஒரே நாளில் 50,040 பேர் பாதிப்பு, 1,258 பேர் உயிரிழப்பு, 57,818 பேர் குணமடைந்து டிஸ்வார்ஜ்.: மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் 1,258 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகித நிலவரம் குறித்து தினமும் காலை 9 மணியளவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
* புதிதாக 50,040 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* இதன் மூலம் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை  3,02,33,183 ஆக உயர்ந்தது.
* புதிதாக 1,258 பேர் உயிரிழந்துள்ளனர்.
* இதன் மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,95,751 ஆக உயர்ந்துள்ளது.
* தொற்றில் இருந்து ஒரே நாளில் 57,944 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதன் மூலம் நாட்டின் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,92,51,029 ஆக உயர்ந்துள்ளது.
* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5,86,403  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* நாட்டின் இதுவரை 32,17,60,077 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

The post இந்தியாவின் கொரோனா நிலவரம்: ஒரே நாளில் 50,040 பேர் பாதிப்பு, 1,258 பேர் உயிரிழப்பு, 57,818 பேர் குணமடைந்து டிஸ்வார்ஜ்.: மத்திய சுகாதாரத்துறை appeared first on Dinakaran.

Tags : India ,Corona ,Central Health Department ,Delhi ,Dinakaran ,
× RELATED கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில்...