×

2 குழந்தைகளுடன் ரயிலில் பாய்ந்து பெண் தற்கொலை

ஊத்தங்கரை:  கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கல்லாவியை சேர்ந்தவர் சுரேஷ்(40). கூலித் தொழிலாளி. இவரது மனைவி அம்மு (34)  5 குழந்தைகள் உள்ளனர். சுரேசுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.  நேற்று காலையும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால்  அம்மு மனமுடைந்தார். முதல் 3 குழந்தைகளும் பள்ளிக்கு சென்றுவிட்டனர். பின்னர் மகள் சுபிதா (7), மகன் பீஷ்மர் (5) ஆகியோரை மட்டும் அழைத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார்.  

பகல் 11:15 மணியளவில்  வீட்டிற்கு அருகில் செல்லும் ரயில்வே தண்டவாளத்தில், அம்மு 2 குழந்தைகளுடன், சதாப்தி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதை கண்ட அவரது உறவினர்கள் கதறி அழுதனர். மற்ற 3 குழந்தைகள் பள்ளிக்கு சென்றதால், அவர்கள் உயிர் தப்பினர். இது குறித்து  சேலம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : 2 Child, train, female suicide
× RELATED இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு...