×

பாகிஸ்தான் மனிதவெடிகுண்டு தாக்குதலில் 9 போலீசார் பலி

கராச்சி: பாகிஸ்தானில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 9 போலீசார் பலியாகினர். பாகிஸ்தானில் பலூசிஸ்தான் மாகாணத்தின் சிபி மாவட்டத்தில் நடந்த விழாவில் பாதுகாப்பு பணியை முடித்து விட்டு போலீசார் ட்ரக்கில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது குவெட்டா-சிபி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காம்ப்ரி பாலம் அருகே வந்த போது போலீஸ் வாகனம் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் போலீஸ் வாகனம் தலைகீழாக கவிழ்ந்து விழுந்தது. இதில் 9 போலீசார் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். மேலும் 13 பேர் காயமடைந்தனர்.  இந்த தாக்குதல் மனித வெடிகுண்டு மூலம் நடத்தப்பட்டிருக்க கூடும் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுவரை எந்த அமைப்பினரும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை.

Tags : Pakistan , 9 policemen killed in Pakistan bomb attack
× RELATED பாக்.கில் தீவிரவாதிகள் தாக்குதல்- 7 பேர் பலி