×

பாஜவுடன் கூட்டணியா? செங்கோட்டையன் பேட்டி!

கோபி:‘‘பாஜவுடன் கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும்’’  என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம், கோபி முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று கூறியதாவது:ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை பொறுத்தவரையில் அதிமுகவிற்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது. ஏனென்றால் தேர்தல் களத்தில் இருக்கும்போது இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது.தேர்தல் நடைபெறும்போது உச்சநீதிமன்றம், கழகத்தின் பொதுக்குழு நடைபெற்றது.

பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்றும், அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படுவதோடு, கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் குறித்த தீர்மானம் செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்ததை மாபெரும் வெற்றியாக கருதுகிறோம்.கூட்டணியை பொருத்தவரையில் தேர்தல் சமயத்தில் முடிவு செய்ய வேண்டிய ஒன்று. தேர்தல் களத்தில் ஒவ்வொருவர் மனநிலையை பொருத்து அமையும்.

அதிமுகவை பொறுத்தவரையில் சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் இயக்கமாக உள்ளது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிச்சாமி சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் தலைவராக இருந்து வருகிறார்.இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

Tags : BJP ,Sengottaiyan , Alliance with BJP? Sengotaiyan interview!
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...