அகர்தலா: திரிபுரா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 60 தொகுதிகளில் 32 தொகுதிகளில் பாஜ வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சியான ஐபிஎப்டி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. முதல்வர் மாணிக் சாஹா நேற்று முன்தினம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து பேசிய அவர், பாஜ தலைமையிலான புதிய அரசு வருகின்ற 8ம் தேதி பதவியேற்கின்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
பதவியேற்பு விழா விவேகானந்தர் மைதானத்தில் நடைபெறும் என்றார். பாஜ ஆளும் மாநில முதல்வர்களுக்கு விழாவில் பங்கேற்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 60 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட நாகலாந்தில் என்டிபிபி-பாஜ கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெற்று மெஜாரிட்டியை பெற்றது. இம்மாநிலத்தில் வரும் 7ம் தேதி பாஜ கூட்டணி புதிய ஆட்சி அமைக்க உள்ளது. இவ்விழாவிலும் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார்.