×

சரிதா நாயர் மருத்துவமனையில் அனுமதி: ‘உணவில் விஷம் கலந்ததாக புகார்’

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியவர் சரிதா நாயர். கேரளா மற்றும் தமிழ்நாட்டில் குறைந்த விலையில் சோலார் பேனல் அமைத்துத் தருவதாக கூறி பலரை ஏமாற்றி பல கோடி மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது. அவருக்கும், அப்போதைய முதல்வர் உம்மன் சாண்டி மற்றும் அவரது அமைச்சரவையில் இருந்த காங்கிரஸ் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து உம்மன் சாண்டி பதவி விலகக் கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே உம்மன் சாண்டி உள்பட காங்கிரஸ் அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் தன்னை பலாத்காரம் செய்ததாக சரிதா நாயர் புகார் கூறியது அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் தனது கார் டிரைவர் வினுகுமார் சிலருடன் சேர்ந்து சதி செய்து தன்னை கொல்வதற்காக உணவில் விஷம் கலந்ததாக சமீபத்தில் சரிதா நாயர் கூறினார்.இது தொடர்பாக குற்றப்பிரிவு போலீசில் அவர் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் வினு குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

இந்தநிலையில் சரிதா நாயர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இடது கண் பார்வை குறைந்துள்ளது. இடது காலிலும் சுகவீனம் ஏற்பட்டு உள்ளது. அவரது ரத்த மாதிரி மற்றும் தலைமுடி ஆகியவை பரிசோதனைக்காக டெல்லியில் உள்ள தேசிய தடயவியல் பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்த பரிசோதனையில் விஷம் கலந்த உணவை சாப்பிட்டதால் தான் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதா என்பது தெரியவரும் என்று கூறப்படுகிறது.

Tags : Saritha Nair , Sarita Nair admitted to hospital: 'Complaint of food poisoning'
× RELATED உம்மன் சாண்டிக்கு எதிரான சரிதா...