பெங்களூரு: தமிழ்நாடு - கர்நாடக எல்லையான பாலாறு வழியாக கடந்த 12 நாட்களாக கர்நாடக அரசு பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு எல்லையோர கிராமங்களில் பதற்றம் தணிந்த பிறகும் கர்நாடகா பேருந்து போக்குவரத்தை தொடங்கவில்லை. மீனவர் ராஜா கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.